என்னை சந்திக்க 10 நிமிடத்திற்கு 1 லட்சம்.. 1 மணிநேரத்திற்கு 5 லட்சம்! ஷாக் கொடுத்த நயன்தாரா பட வில்லன் நடிகர்!

பிரபல நடிகர் தன்னை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்பவர்கள்… நான் ஒதுக்கும் நேரத்திற்கு தகுந்தாற்போல் பணம் கொடுக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட் திரையுலகில், மிகவும் திறமையான இயக்குனராக அறியப்படுபவர் அனுராக் காஷ்யப். இயக்குனர் என்பதை தாண்டி… சில படங்களை தயாரித்துள்ளார். மேலும் இவர் தமிழில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ படத்திலும் சில நிமிட காட்சியில் தோன்றி இருந்தார்.

ஒன் டூ ஒன் என்கிற படத்தில் நடித்து வரும் இவர், விரைவில் ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசி… பரபரப்பை ஏற்படுத்தும் அனுராக் காஷ்யப் தற்போது… இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று திரையுலகை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “நான் உங்களுக்கு உதவ முன்வந்து… நிறைய நேரத்தை வீணடித்து வருகிறேன், இது போன்ற சந்திப்பு பெரும்பாலும் மருத்துவ மனப்பான்மையுடன் முடிகிறது. எனவே இனி நான் அறிமுகம் இல்லாதவர்களை சந்தித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. யாரேனும் என்னை சந்திக்க விரும்பினார் 10 முதல் 15 நிமிடங்களுக்குச் 1 லட்சம் ரூபாயையும், அரை மணி நேரத்திற்கு 2 லட்சம் மற்றும் 1 மணி நேரத்திற்கு 5 லட்சம் வசூலிக்க போகிறேன். இதை உங்களால் கொடுக்க முடியும் என்றால் என்னை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கவும் இல்லை என்றால் என்னை விட்டு விலகியே இருங்கள். சந்திப்புக்கு முன்னரே பணம் செலுத்தவேண்டும் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக இருக்கும் ஒருவர் அதிரடியாக இப்படி யாரையாவது சந்தித்து பேச கூட பணம் கேட்கும் சம்பவம் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நெட்டிசன்கள் சிலர் இதற்க்கு தங்களின் கண்டனங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *