20 தொகுதிகள் பாஜக; மத்திய அமைச்சர் கனவில் அண்ணாமலை! பாமக, தேமுதிக நிலை?

சென்னை: 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முடிவு செய்துவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

 

வருகின்ற ஏப்ரல் மாதம் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் மீண்டும் மோடி பிரதமராக வர வாய்ப்புகள் உள்ளதாக பொதுவாக ஒரு கருத்து பரப்பப்படுகிறது.

அதற்குக் காரணம், காங்கிரஸ் பலமாக இல்லை என்று சொல்லப்படுகிறது. தென் இந்தியாவில் பாஜகவுக்கு அதிக செல்வாக்கு இல்லை என்றாலும், ஹிந்தி பெல்ட் அக்கட்சிக்கு மிகமிக சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய அளவில் பல மாநிலங்களில் பாஜக தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்தக் கட்சியின் நிலை பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்பதே பல அரசியல் ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

குறிப்பாக அண்ணாமலை பாஜக தலைமைக்கு வந்த பிறகு ஊடகங்களில் பாஜக பற்றிய செய்திகள் அதிகம் அடிபடுகின்றன. ஆனால், களத்தில் அந்தளவுக்கு அக்கட்சிக்கு நிர்வாகிகள் இல்லை என்றும் ஒரு கருத்து உலவி வருகிறது.

ஆனால், பாஜக கடந்த 10 ஆண்டுகளைவிட இப்போது வளர்ந்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது எந்த அதிகார பலமும் அரசியல் பலமும் இல்லாத நாம் தமிழர் கட்சிக்கு அதிக வாக்குவங்கி இருப்பதை கடந்தகால தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டி உள்ளன. ஆகவே, இந்தத் தேர்தலில் பாஜகவின் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதைப் போலவே நாம் தமிழர் கட்சியின் எதிர்காலமும் கணிக்கப்பட உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *