32 மாகாணங்களுக்கு பரவிய ஜாம்பி மான் நோய்.. மனிதர்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

அமெரிக்காவிலும் கனடாவின் சில பகுதிகளிலும் குறைந்தபட்சம் 32 மாநிலங்களில், ‘ஜாம்பி மான் நோய்’ என்று அழைக்கப்படும் வைரஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்குப் பரவக்கூடும் என்று எச்சரித்துள்ள விஞ்ஞானிகள் இந்த தொற்றை ‘மெதுவாக நகரும் பேரழிவு’ என்று எச்சரித்துள்ளனர். கடந்த நவம்பரில் அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் உள்ள YellowStone தேசிய பூங்காவில் உயிரிழந்த மானுக்கு நாள்பட்ட கழிவு நோய் (CWD) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்காவின் 32 மாகாணங்கள் மற்றும் கனடாவின் 4 மாகாணங்களில் இந்த ஜாம்பி மான் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் மத்திய அட்லாண்டிக் மாகாணத்தில் அதிக பாதிப்புகள் உறுதியாகி உள்ளன. கன்சாஸ், நெப்ராஸ்கா மற்றும் விஸ்கான்சின் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்த நோய் பரவுவதை ஆய்வு செய்த டாக்டர் மைக்கேல் ஆஸ்டர்ஹோம் இந்த நோயை மெதுவாக நகரும் பேரழிவு’ என்று எச்சரித்தார். இந்த நோய் மனிதர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட மான் இறைச்சியை சாப்பிட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். .

தொற்று நோய் ஆராய்ச்சி மற்றும் கொள்கை மையத்தின் திட்ட இணை இயக்குனரான ஆண்டர்சன் இதுகுறித்து பேசிய போது “ இந்த நோய் மனிதர்களுக்கும் பரவும் சாத்தியம் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.. அது நிச்சயம் நடக்கும் என்று யாரும் கூறவில்லை, ஆனால் மக்கள் தயாராக இருப்பது முக்கியம். ஏனெனில் இந்த நோய் ஆபத்தானது, குணப்படுத்த முடியாதது மற்றும் மிகவும் வேகமாக பரவக்கூடியது. நோயை அழிக்கும் பயனுள்ள எளிய வழி நம்மிடம் இல்லை.” என்று தெரிவித்தார்.

ப்ரியான் என்ற புரதப்பொருளின் வளர்ச்சியின் மூலம் இந்த ‘ஜாம்பி மான் நோய் பரவுகிறது. பொதுவாக ஆரோக்கியமான மூளை புரதங்கள் ப்ரியான் மூலம் அசாதாரணமாக அதிகரிக்கிறது. இது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோய்களை உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. இந்த தொற்று நோய்கள் பாதிக்கப்பட்ட இறைச்சியை உட்கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.

மான் மற்றும் தொடர்புடைய உயிரினங்களில் எடை இழப்பு, ஒருங்கிணைப்பு இழப்பு மற்றும் பிற இறுதியில் ஆபத்தான நரம்பியல் அறிகுறிகளை ஏற்படுத்தும். மேலும் டிமென்ஷியா (மூளை நோய் அல்லது காயம் மற்றும் நினைவாற்றல் குறைபாடுகள், ஆளுமை மாற்றங்கள் மற்றும் பலவீனமான பகுத்தறிவு ஆகியவற்றால் ஏற்படும் மன செயல்முறைகளின் நீண்டகால அல்லது தொடர்ச்சியான கோளாறு), மாயத்தோற்றம், நடக்க மற்றும் பேசுவதில் சிரமம், குழப்பம், சோர்வு மற்றும் தசை விறைப்பு ஆகியவை இந்த ப்ரியான் நோய்களின் அறிகுறிகளில் அடங்கும்.

அமெரிக்க தேசிய பூங்கா சேவை மையம், இந்த நோய் மனிதர்கள் அல்லது வீட்டு விலங்கு இனங்களை பாதிக்கும் என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. என்று கடந்த மாதம் தெரிவித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் திசுக்களை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.’

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி, குரங்குகள் உட்பட மனிதரல்லாத விலங்குகளுக்கு இந்த நோய் ஆபத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன. “இந்த ஆய்வுகள் மக்களுக்கு ஆபத்து இருக்கலாம் என்ற கவலையை எழுப்புகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘1997 முதல், உலக சுகாதார நிறுவனம் அனைத்து அறியப்பட்ட ப்ரியான் நோய்களின் முகவர்களை மனித உணவுச் சங்கிலியில் நுழையவிடாமல் வைத்திருப்பது முக்கியம் என்று பரிந்துரைத்தது.’

நாள்பட்ட கழிவு நோய் முதன்முதலில் மாநிலத்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் 1985 இல் வயோமிங்கில் மான்களில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து இந்த நோய் வட அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *