அம்பானி வீட்டு திருமணத்தில் திருட சென்ற 5 தமிழர்கள்! கடைசியில் நடந்த வேறொரு சம்பவம்

பெரும் பணக்காரரான அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் திருச்சியை சேர்ந்த 5 பேர் குஜராத்திற்கு சென்றுள்ளனர்.

அம்பானி வீட்டு திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும், 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் தொடங்கிய திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் உலக பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருச்சியை சேர்ந்த 5 பேர்
இந்திய மாநிலமான குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் லேப்டாப்பை திருடும் சம்பவம் நடைபெற்றதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து லேப்டாப் மற்றும் ரூ.10 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடிய கும்பலில் உள்ள ஒரு நபர் அடையாளம் காணப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபரை டெல்லியில் கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, திருச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவருடன் சேர்ந்த தீபக், ஜெகன், குணசேகரன், முரளி, ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விசாரணை நடத்திய பொலிஸார் கூறுகையில், “பெரும் பணக்காரரான அம்பானி வீட்டின் திருமண நிகழ்வை அறிந்து திருடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அங்கு, எப்படியாவது திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று குஜராத்திற்கு ரயில் ஏறி வந்துள்ளனர்.

ஆனால், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் பொலிஸார் பாதுகாப்பு பலமாக இருந்ததால் கார் கண்ணாடியை உடைத்து திருடியுள்ளனர். இதை போல 7 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *