நாய்களை கொன்றாலோ, இறைச்சியை விற்றாலோ மூன்றாண்டு சிறை., பிரபல ஆசிய நாட்டில் புதிய சட்டம்

நாய் இறைச்சி வர்த்தகத்தை தடை செய்யும் சட்டத்தை இயற்றியுள்ளது தென் கொரியா.

நாம் கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவது போல், தென் கொரியர்கள் நாய் இறைச்சியை சாப்பிடுகிறார்கள்.

தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உட்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் அந்நாட்டு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

நாய் இறைச்சி உண்பதற்கு தடை விதித்து அந்நாட்டு நாடாளுமன்றம் புதிய சட்டத்தை இயற்றியுள்ளது. இது தொடர்பான மசோதா 208-0 வாக்குகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை பேரவையில் அங்கீகரிக்கப்பட்டது. ஜனாதிபதி Yoon Suk Yeol இந்த மசோதாவில் கையெழுத்திடுவார்.

இந்த மசோதாவின்படி, 2027ஆம் ஆண்டுக்குள் நாய்களைக் கொல்வது, வளர்ப்பது, வியாபாரம் செய்வது மற்றும் விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்படும்.

அதன்பிறகு, நாய் இறைச்சியை யாராவது வாங்கினால், அவர்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஆனால், நாய் இறைச்சி உண்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை. இதனிடையே, இந்த மசோதாவுக்கு விவசாயிகள் பலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த புதிய சட்டம் இன்னும் மூன்று ஆண்டுகளில் அமுலுக்கு வரும். இதற்கிடையில், நாய் இறைச்சி விவசாயிகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மாற்று ஆதாரங்களை ஆராய வேண்டும்.

அவர்களுக்கு முழு ஆதரவையும் வழங்க அரசு உறுதி அளித்துள்ளது. புதிய சட்டத்தால் அவர்களது தொழில்கள் மூடப்பட்டுள்ளதால், இழப்பீடு வழங்குவது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023-ஆம் ஆண்டில் தென் கொரியாவில் சுமார் 1,600 நாய் இறைச்சி உணவகங்கள் மற்றும் 1,150 நாய் பண்ணைகள் இருக்கின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *