Uzhavan Foundation Awards 2024: கார்த்தி உழவன் பவுண்டேஷனின் உழவன் விருதுகள் 2024 – ஆளுமைகளுக்கு கெளரவம்

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபத, நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.

இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த விழாவில், உழவர்களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்று தரும் மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷுக்கு உழவர்கள் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்கான விருது வழங்கப்பட்டது.

விவசாயிகளை பற்றியும் அவர்கள் விளை பொருள்கள் பற்றியும், முக்கியமாக பெண் விவசாயிகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் அபர்ணா கார்த்திகேயனுக்கு சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நிலமற்ற பெண்கள் ஒன்றிணைந்து தரிசு நிலத்தை ஒரு கூட்டு பண்ணையாக மாற்றிய, பள்ளூர் நிலமற்ற விவசாய பெண்கள் சங்கத்துக்கு சிறந்த உழவர் கூட்டமைப்புக்கான விருதும், பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராடி தனி குடியிருப்பும், அவர்களின் வேளாண் பொருள்களுக்கு நல்ல விலையும் கிடைக்க தொடர்ந்து பங்காற்றி வரும் பழங்குடி சமூகப் பெண் ராஜலட்சுமிக்கு வனம் சார்ந்த மக்களின் வேளான் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்கான விருதும் வழங்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *