இது தெரியுமா ? வயிற்றுப்புண்ணை சரிசெய்யும் அத்திக்காய்!!

அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.

அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்னுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம்.

அமர்ந்து தியானம் செய்வதற்கு இந்த அத்தி மரத்திலிருந்து பலகைகளை செய்வார்களாம். இந்த மரப்பலகைகள் தியானத்தின் சக்தியையும் மன ஒருமைப்பாட்டையும் நமக்கு அளிக்கவல்லது என்று சொல்லவார்கள்.

இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அத்திப் பிஞ்சினால் மூலம், வாயு, மூலக் கிராணி, வயிற்றுப்புண், ரத்தமூலம், வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.

அத்திக்காயில் இரும்புச்சத்து, வைட்டமின் சி, சுண்ணாம்புச் சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க, அத்திப்பழங்களைக் காடியில் (வினிகர்) ஒரு வாரம் வரை ஊறவைத்து, அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.

ஆசன வாயின் உட்பகுதியில் இருக்கும் சிரைகள் வீங்கி வெளியேவருவதையே மூலம் என்கிறோம். உடலில் கீழ்குடல் பகுதியிலிருந்து மலக்குடல் வரை உஷ்ணத்தால் பாதிப்பு உண்டாகி வீக்கம் அடையும். இதனால் மலம் கழிக்கும் போது மலத்தை இறுக்க செய்து மலம் போக முடியாதபடி அதிக கஷ்டத்தை கொடுக்கும். அதிக முயற்சி செய்து மலத்தை வெளியேற்ற முயற்சி செய்தால் நீர்த்த தன்மையில்லாமல் காய்ந்த நிலையில் மலம் வெளியேறும். இவை இறுகிய நிலையில் கிழித்து வெளியேறுவதால் இரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசியத்தொடங்கும்.அதோடு ஆசன வாயில் அரிப்பு, வலி, எரிச்சல், கடுப்பு, நமைச்சல் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்கும்.

உள்மூலம், வெளிமூலம் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை இதை எடுத்துகொள்ளலாம். ஆரம்ப கட்ட மூல நோயாக இருந்தால் அத்திக்காய் கொண்டே முழுமையாக குணப்படுத்திவிட முடியும். மலச்சிக்கல் பிரச்சனையை அவ்வபோது கொண்டிருப்பவர்களுக்கு மூலநோய் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இவர்கள் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இயல்பாகவே மாதம் ஒரு முறை அத்திக்காயை உணவில் சேர்த்து வந்தால் குடல்களின் இயக்கம் சீராக்குகிறது. குடல் பிரச்சனையால் வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் கூட நோயின் தீவிரத்தை தடுத்து கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கவும் செய்கிறது. மலக்குடலை சுத்தம் செய்வதால் மூல நோய் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *