ராஷ்மிகாவுடன் நிச்சயதார்த்தமா.? விஜய் தேவரகொண்டா விளக்கம்

தராபாத்: விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் நேற்று முதல் தொடர்ந்து வெளியாகி கொண்டே உள்ளன.

இந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசுகிசுக்கள் எழுந்து வருகிறது.

கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், திருமணத்திற்கு இருவரின் வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி நேற்று முதல் பெரும் வைரலானது.

இந்நிலையில், இது குறித்து விஜய் தேவாரகொண்டாவின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இந்த செய்திகள் அனைத்தும் தவறானது என மறுத்துள்ள அவர்கள், விஜய்யின் திருமணம் குறித்து எந்த முடிவும் தற்போது வரை இல்லை. அதுபோன்ற எந்தவித நகர்வுகளும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *