ஒரே ஆளாய் அணியை தாங்குறான்யா.. பேட்டால் பேசும் ரியான் பராக்.. ரஞ்சி டிராபியில் தெறி சம்பவம்!

கவுகாத்தி : கேரளா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் அசாம் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 104 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடி வருபவர் ரியான் பராக். அசாம் மாநிலத்தில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் ஒரே வீரர் அவர் தான். இதன் காரணமாக ரியான் பராக் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கும். அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட போது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆதரவு பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஆனால் எதிர்பார்ப்புகளை ரியான் பராக் பூர்த்தி செய்யவில்லை. இதனால் அவர் மீது ரசிகர்கள் அதிக விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் ஐபிஎல் தொடரில் சொதப்பினாலும், உள்ளூர் கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே உள்ளிட்ட தொடர்களில் விஸ்வரூபம் எடுத்தார். இதன் காரணமாக இந்திய ஏ அணியில் ரியான் பராக்கிற்கு இடம் கிடைத்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *