சிக்சர் அடிக்கனுமா, அடிச்சிக்கோங்க.. இது தான் என்னுடைய ஸ்டைல்.. சாதனை குறித்து அக்சர் பட்டேல் பேச்சு

இந்தூர் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது t20 போட்டியில் அக்சர் பட்டேல் நான்கு ஓவர்களில் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். இதேபோன்று முதல் டி20 போட்டியிலும் அக்சர் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் களை சாய்த்தார்.

இதற்கு முன்பு ஜடேஜா இந்த சாதனையை படைத்திருந்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற பிறகு அக்சர் பட்டேல் நன்றாக பந்து வீசியது மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் தற்போது தான் டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட் வீழ்த்தி இருக்கிறேன் என்ற சாதனை எனக்கு தெரியும். ஆனால் சாதனைகளை விட இந்தியாவுக்காக நன்றாக செயல்பட வேண்டும் என்பதுதான் எனக்கு முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளாக நான் எவ்வளவு விக்கெட் எடுத்தேன் என்பதே நான் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. தற்போது பந்துகளை மெதுவான முறையில் வீச முயற்சி செய்கிறேன். என்னுடைய லெங்த்துக்களை நான் மாற்றி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறேன். தற்போது ஆட்டத்தின் அனைத்து சூழலிலும் பந்துகளை வீசக்கூடிய உத்வேகமும் நம்பிக்கையும் என்னிடம் இருக்கிறது.

பவர் பிளேவில் கூட தற்போது நான் பந்து வீச தயாராக இருக்கிறேன். டி20 கிரிக்கெட்டில் ஒரு பவுலராக நீங்கள் ஜொலிக்க வேண்டுமென்றால் மனதளவில் உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது பேட்ஸ்மேன் ஓவரில் சிக்சர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் அடிக்கட்டும். அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஏனென்றால் இன்னொரு முறை அதே சிக்சர் அடிக்கும் போது அவர் ஆட்டம் இழக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *