மாரி செல்வராஜ் இயக்கும் படத்துக்காக தன்னுடைய சம்பளத்தை நிர்ணயித்த ரஜினி

ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது.
முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி முடிந்துள்ளது.

இதையடுத்து ரஜினி, லோகேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படம்தான் ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ரஜினி தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கும் ரஜினி 171 படத்துக்கு பிறகு அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளரை ரஜினி இன்னும் முடிவு செய்யவில்லையாம். தன்னுடைய சம்பளம் 210 கோடியாக நிர்ணயித்துள்ளதாகவும், அதைக் கொடுப்பவருக்கே அந்த படம் என்றும் முடிவு செய்துள்ளாராம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *