பிரித்தானியாவில் அதிகாலையில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்: வெளியான புகைப்படங்கள்

பிரித்தானியாவின் ஹவுன்ஸ்லோ பகுதியில் 24 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இளைஞருக்கு கத்திக்குத்து

ஜனவரி 16ம் திகதி அதிகாலையில் பிரித்தானியாவின் ஹவுன்ஸ்லோ (Hounslow) பகுதியில் உள்ள Grove சாலையில் 24 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை 1.15 மணிக்கு இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் இருப்பதாக மெட் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சைகளை தொடங்கினர், ஆனால் கத்தியால் குத்தப்பட்ட இளைஞர் பின்னர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருகின்றனர்.

பொலிஸார் விசாரணை

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட வில்லை என்று மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ளுமாறு தலைமை காவல் கண்காணிப்பாளர் சீன் வில்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *