நாளை பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! குவியும் பக்தர்கள்!

நாளை பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ள நிலையில், பக்தர்கள் பழநியில் குவிந்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச திருவிழா வெகு கோலாகலமாக நடைப்பெற்று வரும். தைப்பூச திருவிழவினையொட்டி, தமிழகத்தில் இருந்து மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பக்தர்கள் விரதமிருந்து பழநி முருகனுக்கு விதவிதமான காவடிகளைச் சுமந்து நடைப்பயணமாகவும் பழநிக்கு வந்து மலையேறி சென்று முருகனை தரிசித்து, அருள் பெறுகிறார்கள். இந்த வருட தைப்பூசத் திருவிழா, பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் நாளை ஜனவரி 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. வருடம் முழுவதும் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திருவிழாக்கள் நடைப்பெற்று வந்தாலும் தைப்பூச திருவிழா கூடுதல் விசேஷம். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாமல் கேரளத்தில் இருந்தும் ளாவில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக, காவடி சுமந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

இப்படி பெரும் பிரசித்தி பெற்ற இந்த திருவிழா நாளை ஜனவரி 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழா தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் ஜனவரி 24-ம் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு மேல் வெள்ளி ரத உற்சவம் நடைபெறும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *