கிங் கோலியின் 2 வாழ்நாள் சாதனையை தூளாக்கிய ஹிட்மேன் ரோஹித்.. பாபர் அசாமின் உலக சாதனை சமன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை என்ற கணக்கில் இந்தியா ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்றது.

குறிப்பாக பெங்களூருவில் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியில் இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா போராடி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 129*, ரிங்கு சிங் 69* ரன்கள் எடுத்த உதவியுடன் 213 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை ஆப்கானிஸ்தானும் குர்பாஸ் 50, இப்ராஹிம் ஜாட்ரான் 50, குல்பதின் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் சரியாக 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவர் மீண்டும் டையில் முடிந்தது.

ரோஹித்தின் சாதனை:
அதைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் ரோகித் சர்மா அதிரடியுடன் இந்தியா நிர்ணயித்த 12 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ரவி பிஸ்னோயிடம் 2 விக்கெட்களை இழந்தது. அந்த வகையில் கோப்பையை வென்ற இந்தியாவின் த்ரில் வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *