ராமர் கோயில் திறப்பு விழாவின் முதல் நாள் விருந்து செலவை ஏற்ற பிரபாஸ்..!

ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 22-ம் தேதி குமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது.

விழாவில் பங்கேற்பதற்காக இந்தியா முழுவதும் உள்ள மாபெரும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள், சினிமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழில் நடிகர் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி, கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி பாலிவுட்டில், அலியா பட், ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன், ஹேமா மாலினி உள்பட பலருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளன. இதில் லட்சக்கணக்கில் பக்தர்களும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், ராமர் கோயில் குடமுழுக்கு விழாவின் போது, முதல் நாளில் விருந்து ஏற்பாடுகளுக்கான அனைத்து செலவுகளையும் பிரபல நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொள்வதாக கூறப்படுகிறது. முதல் நாளில் மட்டும் ஏராளமான திரை மற்றும் அரசியல் நட்சத்திரங்களும், வௌிநாட்டு பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் பங்கேற் உள்ளனர். இதற்காக 50 கோடி ரூபாய் வரை செலவு ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த செலவு அனைத்தையும் நடிகர் பிரபாஸ் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *