நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ‘கீரை சோள ஆம்லெட்’ ரெசிபி.!

சமீபகாலமாக நீரழிவு நோயானது மக்களிடையே கணிசமாக அதிகரித்து வருகிறது. நீரழிவு நோயாளிகள் உணவு பழக்கங்களில் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் இன்று பார்க்கப்போகும் ரெசிபியானது நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான ‘கீரை சோள ஆம்லெட்’ ஆகும்.

நீங்கள் சத்தான காலை உணவை அல்லது ஆரோக்கியமான இரவு உணவை விரும்பினால் இந்த ரெசிபியை செய்யலாம். இது நீரிழிவு மேலாண்மைக்கு உதவுகிறது.

இந்த ஆம்லெட் சோளத்தின் இனிப்பு, கீரையின் மண் தன்மை மற்றும் பச்சை மிளகாயின் காரம் என தனித்துவ சுவையை அளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

சோளம் – 20 கிராம்
கீரை – 50 கிராம்
முட்டை – 2
பச்சை மிளகாய் – 3
உப்பு – 2 சிட்டிகை

செய்முறை :

முதலில் கீரை மற்றும் பச்சை மிளகாயை நன்கு அலசி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் சோளம், நறுக்கி வைத்துள்ள கீரை மற்றும் பச்சை மிளகாய், முட்டை மற்றும் இரண்டு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

அனைத்து பொருட்களையும் நன்கு ஒன்றிணைக்கும் வரை கலக்கவும். ஆம்லெட் செய்ய இதன் சீரான கலவையை உறுதி செய்யவும்

பிறகு அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து மிதமான சூட்டில் சூடாக்கி தேவையென்றால் அதில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.

குறிப்பு : ஒட்டாமல் இருக்க நான்ஸ்டிக் சமையல் ஸ்ப்ரேயைப் பயன்படுத்தலாம்.

தவா சூடானதும் கீரை முட்டை கலவையை ஊற்றி மேற்பரப்பை சமமாகப் பரப்பி விடவும்.

ஆம்லெட் ஒருபுறம் சூடானதும் மறுபுறம் சமைக்க ஆம்லெட்டை கவனமாக புரட்டிப்போடவும்.

முட்டைகள் முழுமையாக வேகும்வரை ஆம்லெட்டை இருபுறமும் பொன்னிறமாகும் வரை சமைக்கவும்.

ஆம்லெட் வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றி பரிமாறவும்.

கூடுதல் சுவைக்காக நறுக்கப்பட்ட கீரை அல்லது கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கலாம்.

இந்த கீரை சோள ஆம்லெட்டை சத்தான மற்றும் சுவையான காலை உணவு அல்லது புருஞ்ச் விருப்பமாக அனுபவிக்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *