நீங்க ரோஹித் இல்ல.. அதெல்லாம் உங்களுக்கு செட்டாகாது.. விராட் கோலிக்கு ஸ்ரீகாந்த் முக்கிய கோரிக்கை

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெற்ற ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்றது.

அதிலும் பெங்களூருவில் நடைபெற்ற 3வது போட்டியில் ஆப்கானிஸ்தானை இரட்டை சூப்பர் ஓவரில் இந்தியா போராடி தோற்கடித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முன்னதாக அத்தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடினர்.

அதில் கேப்டனாக களமிறங்கிய ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் டக் அவுட்டானாலும் கடைசி போட்டியில் 2 சூப்பர் ஓவரிலும் சேர்த்து 129*, 13*, 11* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து தன்னுடைய தரத்தை மீண்டும் நிரூபித்தார். ஆனால் 2வது போட்டியில் சரவெடியாக விளையாட முயற்சித்து 29 ரன்களில் அவுட்டான விராட் கோலி 3வது போட்டியிலும் முதல் முறையாக கோல்டன் டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தார்.

இது செட்டாகாது:
அதை விட பொதுவாகவே நிதானமாக துவங்கி பின்னர் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யக்கூடிய அவர் இத்தொடரில் திடீரென முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்க நினைத்தது ரசிகர்களுக்கு வியப்பாக அமைந்தது. இந்நிலையில் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்குவது ரோகித் சர்மா, ஜெயிஸ்வால் போன்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *