அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்., 50 பேர் பலி.. ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை

அமெரிக்காவை ஒரு பனிப்புயல் உலுக்கி வருகிறது. அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாத புயல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. தொடர் பனிப்புயல் காரணமாக சாலைகளில் பனி படிந்துள்ளது. மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இந்த பனிப்புயல் காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குளிர் காற்று, குறைந்த வெப்பம், அடர்ந்த பனி போன்றவற்றால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

சாலைகளில் பனிப்பொழிவு பெரும் விபத்துகளை ஏற்படுத்தியுள்ளது. வானிலை எச்சரிக்கை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன.

தென்கிழக்கு மாநில சுகாதாரத் துறை Tennesseeயில் வானிலை தொடர்பான 14 இறப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், மெக்காவுக்கு புனித யாத்திரை சென்று வீடு திரும்பிய ஐந்து பெண்கள் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில் tractor மற்றும் trailer விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *