ஜேர்மன் குடியுரிமை பெறுவதை எளிதாக்கும் மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்…

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்படுவது மற்றும் இரட்டைக் குடியுரிமை தொடர்பான மசோதா ஜேர்மன் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மசோதா நிறைவேற்றம்

அந்த மசோதாவுக்கு ஆதரவாக 382 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிராக 234 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர், 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மசோதாவால் என்ன நன்மை?

ஜேர்மனியில் வாழ்வோர், ஒன்றுக்கும் மேற்பட்ட குடியுரிமை வைத்திருப்பது இனி சாத்தியமாகிவிடும். இதற்கு முன்னிருந்தது போலில்லாமல், ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க, வெளிநாட்டவர் ஒருவர் எட்டு ஆண்டுகள் காத்திருந்ததற்கு பதிலாக, இனி ஐந்து ஆண்டுகள் முடிந்ததுமே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். சில சிறப்பு சூழல்களில், மூன்று ஆண்டுகள் முடிந்ததுமே கூட, குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் வழிவகை செய்யப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *