ஷாக்.. இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. பிரேசிலையும் உலுக்கியது.. சுனாமி அலர்ட் இல்லை

டெல்லி: இந்திய பெருங்கடலில் இன்று காலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில் பிரேசில் நாட்டிலும் 6.4 என்ற ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

இந்தியா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் தற்போது அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பெரும்பாலான நிலநடுக்கங்கள் சக்தி குறைந்து இருப்பதால் சேதங்கள் ஏற்படவில்லை.

இந்நிலையில் தான் இன்று அதிகாலையில் இந்திய பெருங்கடலில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் (Southwest Indian Ridge) பகுதியில் இன்று அதிகாலை 3.39 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்ததுள்ளது.

அதேபோல் பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பிரேசில் நாட்டில் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது உடனடியாக தெரியவில்லை. இந்திய பெருங்கடல் மற்றும் பிரசேில் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் கூட அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை இல்லை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *