இதை தெரிஞ்சிக்கோங்க..! நீராகாரம் என்கிற பழைய சோற்றில் இவ்வளவு மகத்துவமா..?

ம் முன்னோர்கள் வாழ்வோடு நீக்கமற கலந்தது பழைய சாதம்.காலையில் ஒரு முட்டி கஞ்சியை, வெங்காயத்தோடு சேர்த்துக் குடித்துவிட்டுதான் வயலுக்குப் போவார்கள்.

அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப் பழஞ்சோறுதான் கொடுத்தது.

சாதத்தை வடித்து, அதில் தண்ணீர் ஊற்றிவைத்தால், மறு நாள் காலையில் அது பழைய சாதம். அதன் நீர் நீராகாரம். மண்பானை பழைய சாதத்தில்தான் நல்ல தரமும் வாசமும் இருக்கும்.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும்போது அதில் நுண்ணுயிர்கள் (லாக்டிக் ஆசிட் பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால்தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது.

நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச் சத்தும் (ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம்.

சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடுசெய்து சாப்பிடுவதைவிட, தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச்சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது.

பழைய சாதத்தின் ஆயுள் 15 மணி நேரம்தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவது நலம் பயக்கும்.

”பழைய சாதம் பற்றி, நம் பாரம்பரிய மருத்துவம் என்ன சொல்கிறது?” இது பற்றி சித்தமருத்துவம் என்ன கூறுகிறது. ‘அகத்தியர் குண வாகடம்’ என்னும் மருத்துவ நூலில், பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *