நடிகர் மாதவனுடன் மீண்டும் நடிக்கும் ஜோதிகா: மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

மிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஜோதிகா. இவர் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் திருமணத்திற்கு பிறகு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஜோதிகா மலையாளத்தில் மம்முட்டியுடன் ‘காதல் தி கோர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது நடிகை ஜோதிகா குழந்தைகளின் படிப்புக்காகவும் பெற்றோர் நலனுக்காகவும் மும்பையில் தங்கியுள்ளார். அதே சமயத்தில் அஜய் தேவ்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘சைத்தான்’ திரைப்படத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு முன்பு இந்தி சினிமாவில் நடித்த ஜோதிகா கடந்த 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தி திரைப்படமான ‘சைத்தான்’ திரைப்படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஜோதிகா-மாதவன் நடிப்பில் வெளியான டும்..டும்..டும்.., பிரியமான தோழி போன்ற திரைப்படங்கள் வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் மாதவன்-ஜோதிகா இணைந்து நடிப்பது ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *