“உலககோப்பை தோல்வி.. பாகிஸ்தான் அணி காரணம் கிடையாது.. இவர் மட்டும்தான் காரணம்” – இன்சமாம் கோபம்

தொடர்ந்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் அரை இறுதி வாய்ப்பை எட்ட முடியாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியது, பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது.

இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் பலர் மாற்றப்பட்டார்கள். கேப்டனாக இருந்த பாபர் அசாம் அழுத்தத்தின் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து ஒட்டுமொத்தமாக விலகிக் கொண்டார்.

மேலும் உலகக்கோப்பை தொடர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தேர்வுக்குழு தலைவராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான ஜாகரா அஷ்ரப் மீது இன்சமாம் உல் ஹக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். உலகக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் பொழுது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சில விருப்பத்தகாத பேச்சுகளை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் பேசும் பொழுது ” இந்தியாவில் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்பு போன்ற ஒரு முக்கியமான தொடரின் போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இந்த அணியை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றும், தேர்வு குழு மற்றும் கேப்டன் மட்டுமே இதில் ஈடுபட்டார்கள் என்று சொன்னால் வீரர்களின் மனநிலை எப்படி இருக்கும்?

இந்த நேரத்தில் தலைமை தேர்வாளரான என் மீது விசாரணை குழு அமைக்கப்பட்டு, நான் பாதியில் ராஜினாமா செய்ததை வீரர்கள் கேள்விப்பட்டால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? இது இங்கே நடந்து கொண்டிருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *