“கூட்டணி முறிவால் கவலைப்பட வேண்டியது பாஜகதான்..!” – சொல்கிறார் பாமக திலகபாமா

`தி.மு.க சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருக்க என்ன காரணமாக இருக்குமென நீங்கள் கருதுகிறீர்கள்..?”

“சமூக நீதி இயக்கம் எனச் சொல்லிக் கொண்டு சமூக நீதிக்கெதிராக செயல்படுகிறார்கள் என்பதற்கு இதுவொரு அடையாளம். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் தகுந்த டேட்டா குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பும் போது தி.மு.க அரசு நினைத்திருந்தால் அதனை 10 நாள்களில் கொடுத்திருக்க முடியும். அதேபோல் இதர மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது போல் இங்கும் நடத்தலாம். இரண்டையும் தேர்தல் நெருக்கத்தில் அறிவித்து வாக்காக மாற்றத்தான் பார்க்கிறார்கள்.”

சாதிவாரி கணக்கெடுப்பு

“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவோம், 10.5% இட ஒதுக்கீடு அமல்படுத்த பாடுபடுவோம் என அ.தி.மு.க உறுதியளித்தால் கூட்டணி வைப்பீர்களா?!”

“மக்கள் பிரச்னைகளுக்கு நிற்போம் எனச் சொன்னால் போதாது. அதற்காக நம்பகத்தன்மையையும் அவர்கள் சேர்த்து தரவேண்டும். 10.5% இட ஒதுக்கீடு விவகாரத்தை முன்னெடுத்தார்கள், அதையே ஆளுமையுடன் செய்திருந்தால் இப்போது இந்த பிரச்னையே வந்திருக்காது”

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது பா.ம.க?”

“அதனை எங்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில்தான் முடிவெடுப்போம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்பது என் கருத்து.”

அன்புமணி ராமதாஸ்

“சரி, அதிமுக – பாஜக கூட்டணி முறிவு.. யாருக்கு சாதகம்.. யாருக்கு பாதகம்?”

“இது அ.தி.மு.க-வுக்கு சாதகமாக மாறும், அவர்களுக்கு வாக்குகள் கூடும், இஸ்லாமியர்களின் வாக்குகளும் உள்ளே வரும். கவலைப்பட வேண்டியது பா.ஜ.க-தான்”,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *