திருமண வரம் கிடைக்கும் தைப்பூசம்..!

முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.

 

பழனி மலையில் முருகன் ஆண்டியாக அமர்ந்திருக்கும் போது சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகன் கோயில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய அந்த மாதவர் ஜோதி வடிவம் எடுத்து இறைவனோடு கலந்த தினம் தைப்பூசம். இந்த நாளில் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். வழக்கமாக ஆண்டின் பிற மாதங்களிலெல்லாம் ஆறு திரைகள் மட்டுமே விலக்கிக் காட்டப்படும் ஜோதிதரிசனம் தைப்பூச திருநாளில் மட்டுமே ஏழு திரைகளும் முழுமையாக நீக்கப்பட்டு முழுமையாக ஜோதி தரிசனம் காண வழி செய்யப்படும்.

மேலும் சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர். தைப்பூச தினத்தன்று அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *