அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிட தேங்காய் பால் கலந்த நண்டு மசாலா செய்து தாருங்கள்

அதில் தேங்காய் பால் கலந்த நண்டு மசாலா செய்முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை

தேங்காய்பால் – 4 மேசைக்கரண்டி

நண்டு – ஒரு கிலோ

மிளகாய் பொடி – ஒரு தேக்கரண்டி

பெரிய வெங்காயம் – ஒன்று

சீரகப்பவுடர் – ஒரு தேக்கரண்டி

மிளகு பவுடர் – 3/4 தேக்கரண்டி

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கரம் மசாலா பவுடர் – ஒரு தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி

செய்முறை: முதலில் நண்டை சுத்தம் செய்து துண்டங்களாக செய்யவும். பிறகு வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும். பின் கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்

பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும்.

பின் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வேகவிடவும், அடிக்கடி திறந்து கிளறி விடவும். நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும். அருமையான சுவையில் நண்டு மசாலா தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *