U19 உலகக் கோப்பை.. ஒரே நாளில் 2 எதிர்பாரா வெற்றி.. நேபாளம் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அபாரம்.. சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் நேபாள அணி ஆப்கானிஸ்தான் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணியையும் வீழ்த்தி அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

இதில் நடைபெற்ற 19வது போட்டியில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே குவித்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் மரூப்கில் மற்றும் கஜன்பர் ஆகியோர் மட்டுமே சிறிது நேரம் களத்தில் நின்று போராடினர்.

இதில் கேப்டன் மரூப்கில் 31 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு பேட்ஸ்மேன் ஆன கஜன்பர் அதிரடியாக விளையாடி 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் குவித்து 37 ரன்களில் ஆட்டம் இழந்தார். பிறகு களம் இறங்கிய பேட்ஸ்மேன்களில் தவுத்சாய் மட்டுமே
ஆறுதல் அளிக்கும் விதமாக 29 ரன்கள் குவித்தார். இதில் குறிப்பிடும் விதமாக ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதில் நேபாள அணித் தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் சந்த் 37 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர் களமிறங்கிய நேபாள அணிக்கும் முதலில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கியது. 24 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் கேப்டன் கனல் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 58 ரன்கள் குவித்து கனல் ஆட்டம் இழந்த நிலையில், பின்னால் வந்த வீரர்கள் சரியான பங்களிப்பை வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் 144 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்டது நேபாளம் அணி. அப்போது களத்தில் இருந்த சுபாஷ் பந்தாரி நிதானமாக விளையாடி 9 ரன்கள் குவித்து நேபாள அணியின் வெற்றி உறுதி செய்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *