பிறந்தநாள் பரிசாகக் கிடைத்த லொட்டரிச்சீட்டு: ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ள கனேடிய பெண்

தன் கணவர் தனக்கு பிறந்தநாள் பரிசாகக் கொடுத்த லொட்டரிச்சீட்டால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார் கனேடிய பெண் ஒருவர்.

நீண்ட நாட்களாக லொட்டரிச்சீட்டு வாங்கும்படி கூறிவந்த பெண்
கனடாவின் மனித்தோபா மாகாணத்தின் தலைநகரான வின்னிபெகில் வாழும் கிறிஸ்டல் (Krystal McKay), தனது கணவரான லாரன்ஸிடம் (Lawrence Campbell), லொட்டரிச்சீட்டு ஒன்று வாங்கிவரும்படி பல வாரங்களாகவே கூறிக்கொண்டிருக்க, ஒருநாள், கிறிஸ்டலுக்கு பிறந்தநாள் பரிசாக லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் லாரன்ஸ்.

பிறந்தநாள் பரிசாக வந்த அந்த லொட்டரிச்சீட்டோ, கிறிஸ்டலின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஆம், அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு 5 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டார் கிறிஸ்டல்.

பெரும்பாலான சாதாரண மக்களைப்போலவே, சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் என்பதுதான் கிறிஸ்டல் குடும்பத்தினரின் ஆசை. அத்துடன், டிஸ்னி லேண்டுக்கு சுற்றுலா செல்லவேண்டும் என்ற ஆசையும் உள்ளது, அதையும் நிறைவேற்றவேண்டும் என்கிறார் கிறிஸ்டலின் கணவரான லாரன்ஸ்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *