இது தெரியுமா ? இரவு தூங்கும்முன்பு ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில்.

ண்மையில், பெருஞ்சீரகம் என்றும் அறியப்படும் சோம்புத் தண்ணீர் பல உடல்நலப் பிரச்சினைகளைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மசாலாப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சோம்பு, கை வைத்தியத்தில் முக்கியமான ஒன்று.

சோம்புத் தண்ணீரை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். கண்களின் பலவீனத்தை நீக்கும் என்று நம்பப்படுகிறது.

சோம்பில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், கண்களின் பலவீனத்தை நீக்குவது மட்டுமல்லாமல், கண்களின் வீக்கம் மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். எனவே தினமும் சோம்பை, தண்ணீரில் கலந்து பானமாக எடுத்துக் கொள்வது நல்லது.

இது தவிர, தோல் பிரச்சனைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது சோம்பு. பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பில் உள்ள வைட்டமின் சி சருமத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல் கறைகளையும் நீக்கும்.எனவே, தொடர்ந்து சோம்பை தண்ணீரில் ஊறவைத்து குடித்து வருவது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சுடுநீரில் சோம்பு போட்டு கொதிக்க வைத்து குடித்தால் தீர்வு கிடைக்கும்..

நாம் அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு சிறிதளவு சோம்பை வாயில் போட்டு நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றங்கள் நீங்கி, பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த பெருஞ்சீரகம் உதவுகிறது.

கருப்பை சார்ந்த குறைபாடுகள், வயிற்றுப்புண், இருமல், மந்தம், மூச்சிரைப்பு, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றிற்கு சோம்பு சிறந்த தீர்வைத் தரும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

சோம்பு நீர்: இரவு தூங்கும்முன்பு, ஒரு ஸ்பூன் சோம்பை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டும். அல்லது, இந்த தண்ணீரை அப்படியே, சோம்பு டீ-யாக போட்டு குடிக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *