இனி யாரும் தப்ப முடியாது. போட்டி தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால். மத்திய அரசு புதிய மசோதா தாக்கல்.!!!

ந்தியாவில் போட்டி தேர்வில் தேர்ச்சி பெறுவதில் லட்சியமாகக் கொண்டு பலரும் முயற்சித்து வரும் நிலையில் சிலர் போட்டி தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கின்றனர்.

ஆனால் ஒரு சிலர் போட்டித் தேர்வில் ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்காக புதிய சட்டம் மசோதா நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டி தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க புதிய மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வருகின்ற திங்கட்கிழமை அறிமுகம் செய்யப்படும் எனவும் இதன் மூலம் திட்டமிட்ட தேர்வு முறைகேடு உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில் நடத்தப்படும் போட்டி தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தொடர்ந்து இந்த புதிய மசோதாவை மத்திய அரசை விரைவில் கொண்டு வர உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *