தொழிலதிபருடன் ரகசிய திருமணமா..? கண்ணீர் விட்டு அழுத நடிகை அஞ்சலி..!

ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அஞ்சலி அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டார்.

அந்த படமும் ரசிகர்களை கவர்ந்தது. வசந்தபாலன் இயக்கத்தில் அஞ்சலி நடித்த நடிகை அங்காடித் தெரு. இந்தப் படம் சென்னையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அவல நிலையை காட்டியது.அங்காடி தெரு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.

இந்தப் படம் அஞ்சலிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த படமான எங்கேயும் எப்போதும் அஞ்சலியின் நடிப்பு பிரமாதம். இதில் அவரது அழகு ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தது.நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலியின் ஜோடி ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்டது. மங்காத்தா, இறைவி , கலகலப்பு என ஒரு சில படங்களில் நடித்த அஞ்சலி திடீரென காணாமல் போனார்.

சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக செய்திகள் வந்தன. அதன் பிறகு அஞ்சலி தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர் அமெரிக்கா சென்று குடியேறியதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையில் உடல் எடையை அதிகரித்து வந்த அஞ்சலி, உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *