2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள் – பட்ஜெட் குறித்து உதயநிதி விமர்சனம்..!

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.தனது பட்ஜெட் உரையில் அவர் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டார்.மொத்தம் 58 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன் அதில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடி வருகிறது.அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பட்ஜெட் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மீண்டும் தமிழ்நாட்டை பாசிஸ்ட்டுகள் புறக்கணித்திருக்கிறார்கள். எவ்வளவு மரியாதை கொடுத்தாலும், நிதி மட்டும் கொடுக்கவே மாட்டோம் என்கிற அவர்களின் நிலைப்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இந்தியாவில் வேலைவாய்ப்பைப் பெருக்க – பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த – மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க எந்த திட்டங்களையும் அறிவிக்காமல், 2047-ல் இந்தியாவை வல்லரசு ஆக்குவோம் என்று மீண்டும் ஒருமுறை அல்வா கிண்டியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்தியா வல்லரசாவதற்கான இலக்கை தள்ளி வைத்துக் கொண்டே போவது மட்டும் தான் பாசிஸ்ட்டுகளின் சாதனை. இடைக்கால பட்ஜெட்டில் கைவிரித்த பாசிஸ்ட்டுகளை, இனி எக்காலத்துக்கும் எழ முடியாத அளவுக்கு இந்திய மக்கள் வீழ்த்துவது உறுதி” என்று அவர் தனகு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *