இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையில் மீண்டும் ஒரு போர் நிறுத்தம் கொண்டுவர முயற்சி

காசாவில் மீண்டும் போர் நிறுத்தம் கொண்டுவர எகிப்து மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றது.

இந்நிலையில் காசாவில் அடுத்த 2 வாரங்களில் மீண்டும் தற்காலிக போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரலாம் என கட்டார் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் நாட்டு பிரதநிதிகள், இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகளை பாரிஸில் வைத்து சந்தித்துள்ளனர்.

இதன்போது எஞ்சியுள்ள பிணைய கைதிகளை ஹமாஸ் விடுவித்தால், காஸாவில் 6 வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என இஸ்ரேல் தரப்பிடம் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு இஸ்ரேல் அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், ஹமாஸும் ஓரளவுக்கு சம்மதம் தெரிவித்ததாக கட்டார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *