5 கோடி பேர்.. சுற்றுலாவின் டெம்பிளேட்.. அயோத்தி குறித்து வெளியான அறிக்கை!

அயோத்தி ராமர் கோவிலால் இந்தியாவின் சுற்றுலாத் திறனை அதிகரிக்க முடியும் என்று உலகின் முன்னணி முதலீட்டு வங்கி மற்றும் மூலதன சந்தை நிறுவனங்களில் ஒன்றான ஜெஃப்ரிஸ் அறிக்கை வெளியிட்டது.

ஜெஃப்ரிஸின் மதிப்பீடுகள், அயோத்திக்கு ஆண்டுக்கு 5 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் குறிக்கின்றன. திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம்.

அயோத்தியானது புதிய பொருளாதார நடவடிக்கைகளுடன் பல மடங்கு வருமானத்தை பெறும். இதற்குக் காரணம், புதிய விமான நிலையம், புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையம், டவுன்ஷிப் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை இணைப்பு, இந்தியாவின் சுற்றுலாத்துறைக்கான உள்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சிக்கான டெம்ப்ளேட் ஆகியன ஆகும்.

மகரிஷி வால்மீகி அயோத்தி சர்வதேச விமான நிலையம் 20 மாதங்களுக்கும் குறைவான காலத்தில் கட்டப்பட்டது. இது, ஹோட்டல்கள், விமான நிறுவனங்கள், எஃப்எம்சிஜி, விருந்தோம்பல், சிமென்ட் மற்றும் பயணத் துணை நிறுவனங்கள் போன்ற துறைகளுக்கு பயனளிக்கும் என்று ஜெஃப்ரிஸ் கூறுகிறார்.

வாட்டிகன் நகரம் மற்றும் மெக்காவிற்கு ஆண்டுதோறும் 9 மற்றும் 15 மில்லியன் பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் அயோத்தியில் ஆண்டுக்கு 50 முதல் 100 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *