இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகல்: வெளியான வர்த்தமானி

பெருந்தோட்டத்துறை மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த விலகிக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்ற வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் ஈ.எம்.எஸ்.பீ.ஏக்கநாயக்க நேற்றைய தினம் (2.2.2023) இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானி
கடந்த 29ம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் லொஹான் ரத்வத்தயின் நியமனம் மற்றும் பதவி விலகல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாவது வர்த்தமானி அறிவித்தலில் லொஹான் அமைச்சராக நியமிக்கப்பட்ட குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது வர்த்தமானி அறிவித்தலில் லொஹான் பதவி விலகியமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *