கனேடிய தமிழ் காங்கிரசை நடுத்தெருவில் விமர்சித்த இளம் பெண்

கனேடிய தமிழ் காங்கிரசை நடுத்தெருவில் விமர்சித்த இளம் பெண் ஒருவரின் காணொளி தற்போது சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றது.

குறித்த விமர்சனமானது இன்று(05.02.2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன் போது கருத்து வெளியிட்ட பெண், ஆயிரம் மாவீரர்களையும், மக்களையும் குற்றுயிராக இரத்தமும் சதையுமாக நாங்கள் அள்ளி கொடுத்து விட்டு, கனடா தமிழர் குறிப்பாக அடங்கி போக வேண்டும் என்று கனேடிய தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது.

இதனை நாங்கள் கேட்டு கொண்டு போசா மடந்தைகளாக அடங்கி போக வேண்டுமா? உரத்து கூறுங்கள் இந்த தலைமை விலக வேண்டும். இந்த கட்டமைப்பு புணரமைக்கப்பட வேண்டும். எங்களுக்கு இவ்வாறான தலைமை தேவையில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *