வி.சி.க.வுடன் 12-ம் தேதி பேச்சுவார்த்தை: அமைச்சர் ஐ.பெரியசாமி..!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான தி.மு.க.-ம.தி.மு.க. இடையேயான தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

தொகுதி பங்கீடு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் வரும் 12-ம் தேதி தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு திரும்பியவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *