கேப்டன் படத்தை பச்சைக் குத்திக் கொண்ட பிரேமலதா..!

2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் தே.மு.தி.க.வின் நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் காலமானார்.

விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். கேப்டன் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் சினிமாவில் பல சாதனைகளை புரிந்து விட்டு நடிகர் சங்க தலைவராக இருந்து அனைவரையும் ஒன்றாக ஒரு குடும்பமாக நடத்தி வந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் சிரித்தபடி இருக்கும் உருவத்தை தே.மு.தி.க.வின் பொதுச்செயலாளரும், அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், மகிழ்ச்சியாக கையில் பச்சைக் குத்திக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேமலதாவின் இந்த அன்பும் பாசமும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. டாட்டூ வீடியோவுக்கு கீழ் பலர் வாவ் என்றும் சிறப்பு என்றும் கமெண்ட் போட்டு பிரேமலதாவை பாராட்டி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *