இந்த உணவுகளை அசைவ உணவுடன் சாப்பிட்டால் ஹார்மோன்களில் பிரச்சனை ஏற்படுத்துமாம்

உணவு என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவு உண்பதால் உடலுக்கு சக்தி கிடைக்கும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

பசி வந்தால் ஆரோக்கியத்தை மறந்து எதாவது உண்டு பசியை மட்டும் போக்கினால் போதும் என்று பலரும் நினைக்கிறார்கள்.

பல சுவையான உணவுகள் அவற்றின் சுவையை வைத்து மனிதனை அடிமையாக்கி வைத்துள்ளது.இதனால் நாம் சுவைக்காக எல்லா உணவுகளையும் உண்கிறோம்.

அந்த வகையில் சில உணவுகள் சரியான முறையில் நாம் உண்பது இல்லை. பொதுவாக அசைவ உணவுகளை உண்ட பின்பு நாம் எந்த எந்த உணவுகளை உண்ண கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

அசைவ உணவு
1. அசைவ உணவுகளை உண்டதன் பின் பால் குடிக்க கூடாது. அதற்கான காரணம் அசைவ உணவுகள் உடலை சூடாக்கும் ஆனால் பால் அப்படி அல்ல இது உடலை குளிராக்கும்.

இந்த இரண்டையும் ஒநே நேரத்தில் நாம் உண்டால் அது எமக்கு ஹார்மோன் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் உடலில் பல தீங்குகள் வரும்.

2.நாம் மீன் இறைச்சி போன்ற உணவுகளை உட்கொண்டால் அதன் பிறகு பால் உற்பத்தி பொருட்களை உண்ண கூடாது. அவ்வாறு உண்பதால் உடலில் லுகோடெர்மா விட்டிலிகோ போன்ற சருமத்தின் நிறம் மாறும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

3.பால் குடித்ததன் பின்னர் அசைவ உணவு உட்கொண்டால் அது செரிமான பிரச்சனையை உண்டாக்கும்.

இதனால் பால் குடித்தவுடன் மீன், கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றை உண்ண கூடாது. பாலும் புரதம் அசைவ உணவுகளும் புரதமாக காணப்படும் போது இரு புரதங்களும் சேர்ந்து ஹார்மோன் பிரச்சனையை உண்டாக்கி நோயெதிர்ப்பு சக்தியையும் குறைக்கும்.

இந்த உணவுகளுடன் பால் மட்டுமல்ல பாலில் செய்த தயிர், டீ இது போன்ற எந்த உணவும் உண்ண கூடாது. நீங்கள் பாலுக்கு பதிலாக சூடுநீர் குடித்தால் மிகவும் நல்லது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *