கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் நாட்டு அதிசொகுசு கப்பல்

கொழும்பு துறைமுகத்தை பிரான்ஸில் இருந்து லீ ஜாக்ஸ் (Le Jacques) என்ற அதிசொகுசு கப்பல் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் 08.02.2024 காலை முதல் கொழும்பு துறைமுகத்தில் நிற்கிறது.

இந்த அதிசொகுசு கப்பலில் 130 சுற்றுலாப்பயணிகள் மற்றும் 120 பணியாளர்களுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுற்றுலாப்பயணிகள்
இந்த நிலையில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள் கொழும்பு உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணிக்கவுள்ளதோடு, குறித்த கப்பல் தாய்லாந்தை நோக்கி பயணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *