கோபித்துக் கொண்டு சென்ற மனைவியை அழைக்க சென்ற கணவன்..மதுபோதையில் நடந்த கொலை

தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் இளைஞரை, மனைவின் சகோதரி கணவர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மனைவியுடன் சண்டை
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வெங்கடேசன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

வெங்கடேசன் அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு ராஜேஸ்வரி தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மனைவியை காண மது அருந்திவிட்டு வெங்கடேசன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தன்னுடன் வருமாறு ராஜேஸ்வரியை அவர் அழைத்துள்ளார்.

அடித்துக் கொலை
ஆனால் கணவருடன் செல்ல அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அப்போது ராஜேஸ்வரியின் சகோதரியின் கணவர் சரணவன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த கணவன், மனைவியை சமரசம் செய்ய முயன்றுள்ளார்.

இதில் வெங்கடேசனுக்கும், சரவணனுக்கு கைகலப்பாகியுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், கட்டை ஒன்றை எடுத்து சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் சரவணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவிட்டு, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *