இதற்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கக்கூடாது..!

மின்வாரியத்தை 3 நிறுவனங்களாக தமிழக அரசு பிரிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இது தமிழக மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது மின்சார துறையை தனியார் மயம் ஆக்குவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்து வரும் நிலையில் அதற்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் முதலமைச்சர் ஒப்புதல் வழங்கக்கூடாது.

மேலும் மின்வாரியத்தை 3 நிறுவனங்களாக பிரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஒருவேளை மின்சாரத்துறை 3 நிறுவனங்களாக பிரிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நலன் மிகவும் பாதிக்கப்படும். இது தவிர மின்கட்டணமும் உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள், சிறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படும். எனவே மின்சார துறையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *