லண்டனில் பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலர்

தெற்கு லண்டனில் பொலிஸ் வாகனத்துடன் பேருந்து ஒன்று மோதிய விபத்தில் 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.

9 பேர்கள் காயங்களுடன்
குறித்த சம்பவமானது ஓவல் சுரங்க ரயில் நிலையம் அருகாமையில் நடந்துள்ளது. பகல் 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவத்தை அடுத்து பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

சில பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பொலிஸ் வாகனத்தில் இருந்து ஒருவரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம்
ஆனால் எவருக்கும் உயிருப்பு ஆபத்தான வகையில் காயம் ஏற்படவில்லை என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், விசாரணையும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

விபத்தினை அடுத்து தடம் எண் 36, 155, 185, 333 மற்றும் 436 ஆகிய பேருந்துகள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. விபத்துக்கான காரணம் தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *