இன்று ரத சப்தமி… திருப்பதியில் ஒரே நாளில் 7 வாகனங்களில் எழுந்தருளும் ஏழுமலையான்!

ன்று பிப்ரவரி 16ம் தேதி ரத சப்தமி விழாவினையொட்டி திருமலை மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருமலையின் மாட வீதிகள் அனைத்தும் வண்ண கோலங்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களை ஈர்த்து வருகிறது.

 

இன்று ஒரே நாளில் ரத சப்தமியை முன்னிட்டு திருப்பதியில் ஏழுமலையான் ஏழு வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாட வீதிகளில் காட்சியளிப்பார். இன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் வீதி உலா நடைபெறும். ஆகையால் இந்த நாளை மினி பிரம்மோற்சவம் என்றும் பக்தர்கள் அழைத்து வருகின்றனர்.

காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். காலை 6.40 மணிக்கு சூரிய உதயம் ஆகும். அதன் பிறகு காலை 9 மணி முதல் 10 வரை சிறிய சேஷ வாகன சேவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்தை ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளிக்க உள்ளார்.

மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகன சேவை நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் 3 வரை சக்ர ஸ்நானம் நடைபெறுகிறது. மாலை 4 முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 வரை சர்வ பூபால வாகனத்திலும் மலையப்ப சாமி காட்சியளிக்க உள்ளார். இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் ஏழுமலையான் ஊர்வலம் நடைபெறுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *