டொனால்ட் ட்ரம்பிற்கு பல மில்லியன் டொலர்கள் அபராதம்!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 354.9 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வட்டியுடன் சேர்த்து, அவர் குறைந்தது $453.5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு
நியூயோர்க்கில் நடந்த சிவில் மோசடி விசாரணைக்கு பின்னரே நீதிபதி இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை டிரம்ப் நியூயோர்க்கில் வர்த்தகம் செய்ய மூன்று ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

மேலும் அவரது மகன்களான எரிக் மற்றும் டொனால்ட் ஜூனியர் இரண்டு ஆண்டுகளுக்கு இதேபோன்ற தடைகளை பெற்றுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *