இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் சேர்ந்தால் 115 மாதங்களில் உங்களது பணம் இரட்டிப்பாகும்..!

தபால் அலுவலகத் திட்டங்கள் சமீப காலமாக வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. எதிர்கால செலவுக்காக சேமிக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். அந்த வகையில், தற்போது இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்த அறிவிப்புகளும் இங்கு காணலாம்.

இத்திட்டத்திற்கான ஆண்டு வட்டி விகிதத்தை இந்த காலாண்டில் 7.5 சதவீதமாக அரசு நிர்ணயித்துள்ளது. தற்போதைய வட்டி விகிதத்தில் இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீட்டுப் பணம் 115 மாதங்களில் இரட்டிப்பாகிவிடும். நீண்ட கால முதலீட்டை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல திட்டமாக இருக்கும்.

இந்தத் திட்டம் ஏறக்குறைய 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்களில் ஒரே நேரத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்குகிறது. உதாரணமாக, 50000 ரூபாய்க்கான கிசான் விகாஸ் பத்ரா முதிர்ச்சியடைந்த பிறகு ரூ. 1,00,000 கார்பஸை உங்களுக்கு வழங்கும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கான முதலில் கணக்கைத் திறப்பதற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 1000 மட்டுமே. இந்தத் திட்டத்தின் கீழ் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஒரு வயந்து வந்த நபர் கூட்டுக் கணக்கு (3 பெரியவர்கள் வரை) மற்றும் பாதுகாவலர் கணக்கு ஆகியவை மைனர் சார்பாக திறக்கப்படலாம். இது தவிர, 10 வயதுக்கு மேற்பட்ட மைனர் தனது சொந்த பெயரில் கணக்கு தொடங்கும் வசதியும் உள்ளது.

திட்டத்தின் முதிர்வுக்கு முன் எந்த நேரத்திலும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தை முன்கூட்டியே மூடலாம். வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற முடியாது. கிசான் விகாஸ் பத்ரா முதலீட்டின் மீதான வருமானம் வரிக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *