வாஸ்து டிப்ஸ்: வீட்டில் துடைப்பம் எங்கே இருக்கணும்? படுக்கைக்கு அடியில் வைக்கலாமா?

வாஸ்துவில், துடைப்பம் வைப்பதற்கான சரியான திசை மற்றும் சில சிறப்பு இடங்கள் உள்ளன. அதில் படுக்கைக்கு இடையில் உள்ள இடத்திலோ அல்லது படுக்கும் கட்டிலின் கிழையோ வைக்கலாமா? கூடாதா? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்…

பொதுவாக துடைப்பத்தை வீட்டிற்கு முன்பு நுழைவு வாசலில் வைக்கக்கூடாது. படுக்கும் கட்டிலின் அருகிலோ அல்லது கீழ் பகுதிலேயோ வைக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. அப்படி மீறி செய்தால் வீட்டில் வாஸ்து தோஷங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி குறையும். படுக்கைக்கு அடியில் வைக்கப்படும் விளக்குமாறு உங்கள் வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும். படுக்கைக்கு அடியில் விளக்குமாறு வைப்பது தவறு என்றாலும், படுக்கைக்கு அடியில் உள்ள பகுதியைத் தவறாமல் சுத்தம் செய்வதும் முக்கியம்.

வாஸ்து படி, படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதோடு, பண இழப்பையும் ஏற்படுத்தும். படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைத்திருந்தால், உங்கள் பணம் வீணாகி, தேவையற்ற நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

துடைப்பம் ஒரு மரியாதைக்குரிய பொருளாகக் கருதப்படுகிறது, மேலும் அதை மிதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. வாஸ்து நடைமுறைகளின்படி, துடைப்பம் என்பது வீட்டை சுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல, பூஜைப் பொருளும் கூட.

வாஸ்துவில், துடைப்பம் உடல் ரீதியாக மட்டுமல்ல, ஆன்மீக சூழலிலும் தூய்மையைக் குறிக்கிறது. படுக்கைக்கு அடியில் துடைப்பத்தை வைப்பதன் மூலம், பகலில் திரட்டப்பட்ட எதிர்மறை ஆற்றல் விளக்குமாறு மூலம் வீடு முழுவதும் பரவும் என்று நம்பப்படுகிறது.

நீங்கள் அதை சரியான இடத்தில் வைத்திருந்தால், அது உங்கள் வீட்டிற்கு செழிப்பைக் கொண்டு வருகிறது. துடைப்பம் கொண்டு, வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றினாலும், தூங்கும் இடத்தில் வைப்பதால், வீட்டிற்கு சுப பலன்களை தராத குப்பைகளுடன் பல எதிர்மறை சக்திகளையும் கொண்டு வரலாம்.

வீட்டில் விளக்குமாறு வைப்பதற்கான சரியான விதிகள்

1. வாஸ்து விதிகளின்படி, வீட்டில் துடைப்பம் வைத்திருந்தால், அது செழிப்பை உண்டாக்கும்.

2. வாஸ்து படி, வீட்டில் இரண்டு துடைப்பங்களை ஒன்றாக வைக்க கூடாது மற்றும் பிரச்சனைகளை தவிர்க்க துடைப்பங்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்க கூடாது.

3. துடைப்பத்தை எப்போதும் வீட்டின் வடமேற்கு மூலையில் வைக்க வேண்டும், வடகிழக்கு அல்லது தென்கிழக்கு மூலையில் வைக்கக்கூடாது.

4. வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பத்தை சமையலறையிலோ அல்லது படுக்கைக்கு அடியிலோ வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

5. உடைந்த துடைப்பத்தை வீட்டில் வைக்கவே கூடாது. துடைப்பம் உடைந்தவுடன், உடனடியாக மற்றொரு துடைப்பத்தை கொண்டு வந்து, வெள்ளிக்கிழமை போன்ற ஒரு நல்ல நாளில் பழைய துடைப்பத்தை வீட்டை விட்டு வெளியே எறியுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *