6 அம்ச கோரிக்கை நிறைவேறுமா? இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்து தொழிலாளர்கள் 15 வது ஊதிய குழு உட்பட ஆறு அம்ச கோரிக்கை தொடர்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தை வார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் 15 வது ஊழியர் குழுவை அமைக்க வேண்டும், நிலுவையில் இருக்கக்கூடிய ஓய்வு பெற்றவர்களுக்கான 96 மாத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று போக்குவரத்துத்துறை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இணை ஆணையர் முன்னிலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.இந்த பேச்சு வார்த்தையாவது அனைத்து அம்ச கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *