டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி : குழந்தையை தத்தெடுப்பது அடிப்படை உரிமை இல்லை..!

பெற்றோர் இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் ஆசிரமங்களில் சேர்க்கப்படுகின்றனர். குழந்தை இல்லாத பெற்றவர்கள் அவர்களை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். சமீபத்தில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் – 2015ன் கீழ், மூன்றாவது குழந்தையை தத்தெடுக்க அனுமதி வேண்டி, ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள பெற்றோர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதற்கான கருத்தை டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ளது.

இதில் அரசியலமைப்பின், 21 வது பிரிவின் கீழ், தத்தெடுப்பு உரிமையை அடிப்படை உரிமையாக கருத முடியாது என்றும் தத்தெடுக்கும் பெற்றோர் யாரைத் தத்தெடுப்பது என்பதை தேர்வு செய்ய உரிமை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் நலனை மையப்படுத்தியே தத்தெடுப்பு திட்டம் செயல்படுகிறது. குழந்தை இல்லாத தம்பதியர் மற்றும் ஒரு குழந்தை உள்ள பெற்றோர், சாதாரண குழந்தையை தத்து எடுக்கின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது என்பது குறைவாக உள்ளது. இந்த குழந்தைகளை அதிக அளவில் தத்தெடுப்பது தான், இந்த திட்டத்தின் நோக்கம் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார் நீதிபதி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *