கனடாவில் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நோய்த் தாக்கம்

கனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் புற்று நோய்த் தாக்கத்தில் பதிவாகும் மரணங்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெருங்குடல் புற்று நோய் தாக்கம்
50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விடவும், 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் பெருங்குடல் புற்று நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இளையோர் மத்தியில் அதிகளவில் புற்று நோய் ஏற்படுவது குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நோய் அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் நோயாளர்களை குணப்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *